அவன் சம்பாதித்த முதல் நூறு ரூபாயில் தன் காதலிக்கு வாங்கிக்கொடுத்த முதல் அன்பளிப்பு, பூக்கள்... ஒரு சிகப்பு ரோஜா, ஒரு செயற்கையான ரோஜா மற்றும் சில பூக்கள்.. "ஏன் இதை வாங்கினாய்?" என்று அவள் அவனிடம் வினவியபோது, அவன் பதிலை கீழே உள்ள கவிதையாய் எழுதி அவளிடம் கொடுத்தான் .. அதை அவள் படித்த பிறகு அவன் மேல் கொண்டுள்ள காதலையும், அவளின் ஏக்கங்களையும் அன்று நேரில் அவன் கண்டான் ... :) இதோ அந்த கவிதை..
என் முதல் சம்பாத்தியம்..
முத்தாக நீ கிடைத்தது எனது பாக்கியம்..
உனக்கென்ன வாங்குவது என்று என் மனதினுள் கடும் போராட்டம்..
பிறகோ பெரும் கொண்டாட்டம்..
உனக்காக இந்த மலர்களை வாங்கினேன்..
சிகப்பு ரோஜா நான்... செயற்கையான ரோஜா நீ..
நம் காதலை உணர்த்துவது மிச்சமுள்ள பூக்கள்..
நான் வாடினாலும் நீ வாடாமல் இருப்பதற்காகவே வாங்கினேன் உனக்காக
செயற்கையான பூவை..
என் மணம்(காதல்) உன் மேல் படர்ந்து உன்னையும் மணக்கச்செய்யும் (காதலிக்கச்செய்யும்)..
முகர்ந்துக்கொள் ... உன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துக்கொள்..
அம்மகிழ்ச்சி என்றும் வாடாமல்...
- வெ. தமிழன்
Feb 20, 2010
என் நிலை.. நீ இல்லாததினால்...
விழிகள் உறங்கும் நேரம் இது...
உன் நினைவுகள் துயில் எழும் தருணம் இது..
என் இமைகளை நான் மூடினால், என் மனதினுள் நீ உன் இமைகளை திறக்கின்றாய்..
காதல் ததும்பும் பாடல்கள் நான் கேட்டாலும், உன் வார்த்தைகளே என் காதினுள்
காதலாய் ரீங்காரமிடுகின்றன..
சில நேரம் சிரிக்கின்றேன்... மனதினுள் நீ வாழ்வதால் வரும் சந்தோஷம் அந்த சிரிப்பு..
சில நேரம் அழுகின்றேன்.. மனதினுள் மட்டுமே நீ என்னுடன் இருப்பதால் வரும் சோகம் அந்த அழுகை..
கண்கள் மூடினால் கண்ணீர் என்னை அணைக்கின்றதே...
என்னுடன் வந்துவிடு..
என் நண்பர்களுக்கு தோழியாக..
என் பெற்றோருக்கு மருமகளாக..
என் தங்கைக்கு அண்ணியாக..
எனக்கு மனைவியாக..
என்றும் மறைந்திடாத காதலுடன் இருப்பேன், உன் கணவனாக...
- வெ. தமிழன்
உன் நினைவுகள் துயில் எழும் தருணம் இது..
என் இமைகளை நான் மூடினால், என் மனதினுள் நீ உன் இமைகளை திறக்கின்றாய்..
காதல் ததும்பும் பாடல்கள் நான் கேட்டாலும், உன் வார்த்தைகளே என் காதினுள்
காதலாய் ரீங்காரமிடுகின்றன..
சில நேரம் சிரிக்கின்றேன்... மனதினுள் நீ வாழ்வதால் வரும் சந்தோஷம் அந்த சிரிப்பு..
சில நேரம் அழுகின்றேன்.. மனதினுள் மட்டுமே நீ என்னுடன் இருப்பதால் வரும் சோகம் அந்த அழுகை..
கண்கள் மூடினால் கண்ணீர் என்னை அணைக்கின்றதே...
என்னுடன் வந்துவிடு..
என் நண்பர்களுக்கு தோழியாக..
என் பெற்றோருக்கு மருமகளாக..
என் தங்கைக்கு அண்ணியாக..
எனக்கு மனைவியாக..
என்றும் மறைந்திடாத காதலுடன் இருப்பேன், உன் கணவனாக...
- வெ. தமிழன்
கனவான காதல்...!
என் காதல் ஒரு கனவாக முடிந்தது..
அவள் கை பிடித்து என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தேன்..
இன்று அவள் இல்லாமல் என் வாழ்க்கை நகரவில்லை..
நினைத்தாலே நெஞ்சம் வெடித்து அழுகை வரும்..
அவளையும், அவளின் காதலையும், அவளின் நினைவுகளையும்
விட்டுக்கொடுக்கமுடியாதவனாய், கண்ணீர் சிந்துகின்றேன்..
அக்கன்நீரும் அவள் நினைவாக வருகின்றதால் அதை கீழே சிந்தாமல்
துடைத்துகொள்கிறேன்..
அவள் என்னுள்ளே இருக்க வேண்டும் என்பதற்காக...
- வெ. தமிழன்
அவள் கை பிடித்து என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தேன்..
இன்று அவள் இல்லாமல் என் வாழ்க்கை நகரவில்லை..
நினைத்தாலே நெஞ்சம் வெடித்து அழுகை வரும்..
அவளையும், அவளின் காதலையும், அவளின் நினைவுகளையும்
விட்டுக்கொடுக்கமுடியாதவனாய், கண்ணீர் சிந்துகின்றேன்..
அக்கன்நீரும் அவள் நினைவாக வருகின்றதால் அதை கீழே சிந்தாமல்
துடைத்துகொள்கிறேன்..
அவள் என்னுள்ளே இருக்க வேண்டும் என்பதற்காக...
- வெ. தமிழன்
Feb 13, 2010
காதல் ஸ்பெஷல்...
* காதலிக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,
காதல் அரும்ப ஒரே காரணம் நீ தான்...
* உன்னை வர்ணித்தால்
அது கவிதையல்ல.. கட்டுரை.
கட்டுரையை கவிதையாக்கினேன்
ஒற்றை வரியில்..
என் அன்பிற்குரிய காதலியே...
* உனது செருப்பு என்னிடம் கதறியது..
உனது எடை குறைந்து கொண்டே போகிறதாம்.
"அதற்கு ஏன் வருத்தப்படுகிறாய்?" என்றேன்..
உனது சுகமான சுமையை அதனால் மறக்க முடியவில்லையாம்..
* "மறக்க வேண்டும் அவளை" என்று நினைக்கின்றேன்..
அனுதினமும்...
காதல் அரும்ப ஒரே காரணம் நீ தான்...
* உன்னை வர்ணித்தால்
அது கவிதையல்ல.. கட்டுரை.
கட்டுரையை கவிதையாக்கினேன்
ஒற்றை வரியில்..
என் அன்பிற்குரிய காதலியே...
* உனது செருப்பு என்னிடம் கதறியது..
உனது எடை குறைந்து கொண்டே போகிறதாம்.
"அதற்கு ஏன் வருத்தப்படுகிறாய்?" என்றேன்..
உனது சுகமான சுமையை அதனால் மறக்க முடியவில்லையாம்..
* "மறக்க வேண்டும் அவளை" என்று நினைக்கின்றேன்..
அனுதினமும்...
என் காதலி...!
மலரும் மொட்டு.
பிறந்த குழந்தையின் நிறம் அவளின் மனம்.
அதிகாலை சூரியன்.
நடுநிசி நிசப்தம்.
உருகும் ஐஸ்கிரீம்.
நுனிநாக்கின் தித்திப்பு.
அன்னையின் அன்பு.
தந்தையின் கண்டிப்பு.
நண்பனின் நட்பு.
எதிரியின் துளி இரக்கம்.
உயிர்குடிக்கும் போதை, இந்த பேதை.
அட்டகாசமான சிரிப்பு.
அடக்கி வாசிப்பது அவளின் இயல்பு.
பிடிவாத பேய். என்றும் மடியாத சேய்.
இவைகள் அனைத்தும் ஒன்றாக, இவைகளை மிஞ்சிய சாதுர்யமான தந்திரக்காரி.
என் மனதை கொள்ளைக்கொண்ட அழகிய கொள்ளைக்காரி.
என் காதலி..
- வெ. தமிழன்
பிறந்த குழந்தையின் நிறம் அவளின் மனம்.
அதிகாலை சூரியன்.
நடுநிசி நிசப்தம்.
உருகும் ஐஸ்கிரீம்.
நுனிநாக்கின் தித்திப்பு.
அன்னையின் அன்பு.
தந்தையின் கண்டிப்பு.
நண்பனின் நட்பு.
எதிரியின் துளி இரக்கம்.
உயிர்குடிக்கும் போதை, இந்த பேதை.
அட்டகாசமான சிரிப்பு.
அடக்கி வாசிப்பது அவளின் இயல்பு.
பிடிவாத பேய். என்றும் மடியாத சேய்.
இவைகள் அனைத்தும் ஒன்றாக, இவைகளை மிஞ்சிய சாதுர்யமான தந்திரக்காரி.
என் மனதை கொள்ளைக்கொண்ட அழகிய கொள்ளைக்காரி.
என் காதலி..
- வெ. தமிழன்
காதலித்தேன்.. என்னை காதலிக்காதவளை..
என் முதல் காதல் அவள் மீது.
என் இதயத்தில் கால் பதித்த அவளை
காலங்கள் கரைய,
கவிதைகள் உருக,
காதலித்தேன்.
ரசிக்க ரசிக்க அவளின் உருவமும்,
ருசிக்க ருசிக்க அவளின் குரலும் இருந்தன.
கண்களால் அணைத்துக்கொண்டேன்.
செவிகளால் அள்ளி அள்ளி பருகினேன்.
சோலைவனமாய் இருந்த என் காதலை தகர்த்தான்
பாலைவனத்தை சேர்ந்த பாமுகன்.
அவன் காதலை ஏற்று நீ என் காதலை கொலை செய்தாய்.
வற்றாத என் காதல் உன் மனதில் வடிக்கப்பட்ட காதலாய் மாறியது.
என் உண்மைக்காதலை இவ்வுலகம் உவமையாக்கிக் கொண்டது.
இரவுகள் கழிந்தன, விடியல்கள் தொடர்ந்தன.
என் இருண்ட, இருட்டடிக்கப்பட்ட காதல் மட்டும் அப்படியே இருந்தது.
" நான் உன்னை காதலிக்கவில்லை" என்ற உன் வார்த்தைகள் என் மனதை
ரணமாக்கினாலும், உனக்காக அதையும் காதலுடன் ஏற்றுக்கொண்டேன்.
என் சோலைவனத்தில் உள்ள காதல் பூக்களெல்லாம் கருகி, தனி ஒரு மரமாய்,
நடைப்பிணமாய் நான் வளர்ந்து கொண்டிருக்கின்றேன்.
உயிரின் கடைசி துளி உள்ள வரை உன் மீதுள்ள என் காதல் வாழும், உன் வருகைக்காக மிச்சமிருக்கும்.
- வெ. தமிழன்
என் இதயத்தில் கால் பதித்த அவளை
காலங்கள் கரைய,
கவிதைகள் உருக,
காதலித்தேன்.
ரசிக்க ரசிக்க அவளின் உருவமும்,
ருசிக்க ருசிக்க அவளின் குரலும் இருந்தன.
கண்களால் அணைத்துக்கொண்டேன்.
செவிகளால் அள்ளி அள்ளி பருகினேன்.
சோலைவனமாய் இருந்த என் காதலை தகர்த்தான்
பாலைவனத்தை சேர்ந்த பாமுகன்.
அவன் காதலை ஏற்று நீ என் காதலை கொலை செய்தாய்.
வற்றாத என் காதல் உன் மனதில் வடிக்கப்பட்ட காதலாய் மாறியது.
என் உண்மைக்காதலை இவ்வுலகம் உவமையாக்கிக் கொண்டது.
இரவுகள் கழிந்தன, விடியல்கள் தொடர்ந்தன.
என் இருண்ட, இருட்டடிக்கப்பட்ட காதல் மட்டும் அப்படியே இருந்தது.
" நான் உன்னை காதலிக்கவில்லை" என்ற உன் வார்த்தைகள் என் மனதை
ரணமாக்கினாலும், உனக்காக அதையும் காதலுடன் ஏற்றுக்கொண்டேன்.
என் சோலைவனத்தில் உள்ள காதல் பூக்களெல்லாம் கருகி, தனி ஒரு மரமாய்,
நடைப்பிணமாய் நான் வளர்ந்து கொண்டிருக்கின்றேன்.
உயிரின் கடைசி துளி உள்ள வரை உன் மீதுள்ள என் காதல் வாழும், உன் வருகைக்காக மிச்சமிருக்கும்.
- வெ. தமிழன்
என் காதலியின் மன்னிப்பு கடிதம்...!
* இனம் புரியாத ஈர்ப்பு.
மனம் புரிந்த நட்பு.
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லை என்று
மனம் உவந்து சொன்ன வார்த்தைகள்,
வாரி இறைத்து வந்த கவிதைகள்.
பேசிக்கொண்டே விடியும் இரவுகள்.
உரசிக்கொண்டே பிரியும் சந்திப்புகள்.
கற்பனை குழந்தைகளும், அதற்கு
ஒப்பனை பெற்றோர்களாக நாமும்.
உற்சாகமான சிரிப்புகளும், மரணத்தை விட
கொடுமையான விசும்பல்களும்,
அனல் கக்கிய எனது கோபங்களும், அதனை
தணிக்கும் உனது ' கொஞ்சல்களும் கெஞ்சல்களும்' ,
பிரிவு என்று வந்த போதும், முறிவு என்ற ஒன்றை
நான் ஏற்படுத்திய போதும்,
மரணத்தின் வாயில் வரை நீ சென்று வந்த போதும்
இறக்காத என் காதல்,
என்னை விரும்பும் ஓர் உயிர்காக என்
நாட்குறிப்பில் புதைந்து விட்டது. மன்னித்துவிடு.
இப்படிக்கு உன் முதல் காதலி..
- வெ. தமிழன்
மனம் புரிந்த நட்பு.
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லை என்று
மனம் உவந்து சொன்ன வார்த்தைகள்,
வாரி இறைத்து வந்த கவிதைகள்.
பேசிக்கொண்டே விடியும் இரவுகள்.
உரசிக்கொண்டே பிரியும் சந்திப்புகள்.
கற்பனை குழந்தைகளும், அதற்கு
ஒப்பனை பெற்றோர்களாக நாமும்.
உற்சாகமான சிரிப்புகளும், மரணத்தை விட
கொடுமையான விசும்பல்களும்,
அனல் கக்கிய எனது கோபங்களும், அதனை
தணிக்கும் உனது ' கொஞ்சல்களும் கெஞ்சல்களும்' ,
பிரிவு என்று வந்த போதும், முறிவு என்ற ஒன்றை
நான் ஏற்படுத்திய போதும்,
மரணத்தின் வாயில் வரை நீ சென்று வந்த போதும்
இறக்காத என் காதல்,
என்னை விரும்பும் ஓர் உயிர்காக என்
நாட்குறிப்பில் புதைந்து விட்டது. மன்னித்துவிடு.
இப்படிக்கு உன் முதல் காதலி..
- வெ. தமிழன்
Subscribe to:
Posts (Atom)