Aug 27, 2009

வலி..........!

** தலைப்பே வலிக்கிறதா...?
அனுபவிபவனுக்குத்தான் தெரியும்
வலியின் வலி எப்படி என்று..
அனுபவித்தவன் சொல்கிறேன்.. கேளுங்கள்..
இறைவனிடம் ஓர் வேண்டுகோள்...
நான் பிறக்கும்போது எனது அன்னைக்கு வலிகொடுக்காமல்
பிறந்திருக்கக்கூடதா என்று..
வலி மனதை ரனமாக்குகின்றது..
பின்னர் குனமாக்குகின்றது...
குழந்தையாய் அடிபட்டால் வரும் வலி..
மாணவனாய் ஆசிரியரிடம் அடிவாங்கும் வலி..
பருவ இளைஞனாய் காதலி பிரியும் வலி ..
முதிர் இளைஞனாய் தோல்வியை சந்திக்கும் வலி..
தகப்பனாய் தன் குடும்பத்தை பராமரிக்க இயலாத வலி...
கிழவனாய் தன் இன்னொரு பாதியை இழக்கும் வலி..
விதங்கள் வேறு..
ஆனால் வலி ஒன்று..
வலி, உளி போன்றது..
வாழ்கையை செதுக்குகின்றது..
உளி இல்லையெனில் சிலை இல்லை..
சிலை ஆகாத கல் போற்றப்படுவதில்லை..
வலிக்கின்றதா..?

5 comments:

  1. Romba valikuthuda.. epadi ipadi.. venam.. anan naladhuku thanda solren..venam

    ReplyDelete
  2. NIce MAn..I felt the real pain while reading dis....

    ReplyDelete
  3. romba yosikathada ....!
    really nice
    :)

    ReplyDelete
  4. another sparkling lyrics by vellai thamilan..

    ReplyDelete

**VISIT COUNTER**