Aug 27, 2009

நம்பிக்கை...!

** புண்பட்ட நெஞ்சுக்கு மாமருந்து..
தோழா...!
நம்பிக்கையை இழந்து விடாதே...
அதில் தான் வாழ்க்கை இருக்கின்றது.
எதில் இல்லை நம்பிக்கை..?
இரவு இருந்தால் பகல் இருப்பதில்லையா..?
தேனைப்போன்ற இனிமையும் இரும்பைப்போன்ற வலிமையும்
உடையதாட நம்பிக்கை..
நம்பிக்கையும் இறைவனும் ஒன்று தான்.
உணரத்தான் முடியுமே தவிர
கண்ணெதிரே தோன்றாது.. ஆனால் இரண்டுமே
எல்லா இடங்களிலும் இருக்கின்றன...
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி..
தடுமாறாமல் ஏற நம்பிக்கைதான் உனக்கு தடி.
தோல்வி கண்டு துவண்டு விடாதே....!
அன்னை உனக்கு புகட்டுவது பால் மட்டுமல்ல,
நீ வளர்ந்து விடுவாய் என்ற நம்பிக்கையும் தான்..
நம்பிக்கையோடு உழை..!
உழைப்பின் வேர்களுக்கு நம்பிக்கை நீரூற்று.
இனிமையான அதன் கனிகள் நீ சுவைக்க காத்துக்கொண்டிருக்கின்றன...

- வெள்ளை தமிழன்


No comments:

Post a Comment

**VISIT COUNTER**