Aug 12, 2009

எனது கிறுக்கல்கள் ....!

* ' ரௌத்ரம் பழகு' என்றான் பாரதி..
தேவை இல்லை ..
கதகதப்பான வெதுவெதுப்பான கருவறையை
உதைத்து, கிழித்து
சொதசொதப்பாய் ரத்த சதையாய் வந்து விழுந்த நாம்
ரௌத்ரம் பழகதேவை இல்லை..

* இப்பொழுது நினைத்தாலும் என் உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை வருகின்றது.
" அச்சமில்லை அச்சமில்லை. அச்சம் என்பதில்லையே ...!" என்ற வரிகளை
அச்சத்துடன் மேடையில் பேசியதை நினைத்து...

* ஆடி தள்ளுபடியில் ஆடைகள் எடுக்க கடைவீதிக்கு சென்றிருந்த பொழுது அவளை கண்டேன்..
கயல்விழி கண்களும், பட்டு போன்ற கன்னங்களுடன் வீற்றிருந்தாள் அவள்..
முட்டி மோதும் முன்னழகு, பிடரியை அலங்கரிக்கும் பின்னழகு, பேரழகு..
அவள் முத்து போன்ற விரல்களால் தன்னுடைய இடுப்பினை தாங்கி பிடிக்கும் போது அனைவர் பார்வையும் அவள் மீது..
இத்தனை அழகும், நளினமும் இருந்தும் உயிரற்றவலாய் இருந்தாள்..
ஜவுளிக்கடையில் பொம்மையாய்....


- வெள்ளை தமிழன்..

1 comment:

  1. Wow!! ONce again yo Proved Yor Tamil Skill da .. Really a lovable Poet u r !!!!

    ReplyDelete

**VISIT COUNTER**